“மாநாடு எனக்கு பிடிக்கவே இல்ல”ன்னு சொன்ன ரசிகர்… அதுக்கு வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?

  • January 17, 2022 / 04:41 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் “கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ‘மாநாடு’ தான் தனக்கு பிடிக்கவில்லை” என்று சொன்ன ஒரு வீடியோவை பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த வெங்கட் பிரபு “பிரேம் நாம் எல்லா விமர்சனங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம பார்க்காத விமர்சனங்களா? அடுத்த படம் இவருக்கும் பிடிக்குற மாதிரியும், புரியுற மாதிரியும் எடுக்க முயற்சி செய்வோம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus