வாடிவாசல் படத்தில் இது தான் கதைக்களம் !

  • October 28, 2022 / 02:43 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்தார் . இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது . பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது .

 

இந்நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது . இந்நிலையில் ஜல்லிக்கட்டு காட்சியை பிரமாண்டமான முறையில் படமாக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன் . இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு செட் அமைக்கப்பட உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது . இது ஒரு பக்கம் இருக்க வாடிவாசல் படத்தின் கதை 60 களில் நடக்கும் படமாகும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார் ,மேலும் 60-களில் தமிழகத்தில் அரசியல் களம் கொந்தளிப்பாக இருந்தது.. ஹிந்தி எதிர்ப்பு அதிகம் இருந்தது காலம் இதை எல்லாம் படத்தின் கதையில் வைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus