சினிமாவில் சுதந்திரம் இல்லை – வெற்றிமாறன்

  • January 13, 2023 / 01:50 PM IST

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றி மாறன் . இவர் இயக்கத்தில் விடுதலை முதல் பாகம் விரைவில் வெளியாக உள்ளது அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன் .

அண்மையில் நடந்த ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இதுகுறித்து கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிகமான சுதந்திரம் காணப்பட்டது. ஓடிடியில் படங்களை வெளியிடும்போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம். ஆனால் திரையரங்குகளில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. திரையரங்குகளில் படங்களை வெளியிடும்போது தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேசமயம் போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம்.

இந்த சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது. வருங்காலத்தில் ஓடிடியில் குறிப்பிட்ட ஜானரில் படங்களை இயக்க வேண்டும் என்று இயக்குனர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம். அதை நோக்கிய கதைகளை யோசிக்கும் கட்டாயம் இயக்குநர்களுக்கு உருவாக நேரும். மக்களுக்கான படம் எடுத்து அதை மக்களுக்காக திரையிடும்போது தான் சினிமாவின் முழு சுதந்திரம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus