“மீரா என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்”… மகள் குறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

  • September 22, 2023 / 10:01 AM IST

சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இப்போது இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரோமியோ’ என 6 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் விஜய் ஆண்டனியின் வீட்டில் அவரது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தில் இருந்ததால் இம்முடிவை எடுத்திருக்கிறார்.

தற்போது, விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்றிருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என்று உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus