உச்சகட்ட கோபத்தில் விஜய் ! அதிர்ந்து போன வாரிசு படக்குழு !

  • October 19, 2022 / 10:44 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது . இதனால் அவருக்கு மருத்துவர் ஒரு வாரம் நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளி தினம் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது . நடிகர் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி என்கிற பாடலை இசையமைப்பாளர் தமன் ரீமேக் செய்து உள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது . இதனால் தற்போது இந்த பாடலின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .


இது ஒரு பக்கம் இருக்க வாரிசு படத்தின் காட்சிகள் அடிக்கடி லீக் ஆகி வந்தது. சில தினங்களுக்கு முன் விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி தந்தது. இந்நிலையில் நடிகர் படப்பிடிப்பில் கோபம் அடைந்து படப்பிடிப்பில் உள்ள பௌன்சர்களை கடுமையாக கொந்தளித்து உள்ளார் . விஜய்யின் கோபத்தை பார்த்த பலரும் அதிர்ந்து போய் உள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus