“அண்ணா ஒரே ஒரு தடவை”யென கெஞ்சிய ரசிகர்கள்… அதன் பிறகு விஜய் செய்த விஷயம் என்ன தெரியுமா?

  • November 21, 2022 / 02:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இப்படம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படமான ‘வாரிசு’வை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. விஜய்-யின் 67-வது படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 20-ஆம் தேதி) பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு ‘தளபதி’ சென்றுள்ளார். அங்கு அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டனர். அப்போது விஜய்யின் காரின் அருகே சென்ற ரசிகர்கள் “அண்ணா ஒரே ஒரு தடவை கார் கண்ணாடியை இறக்குங்க” என்று கெஞ்ச, அவரும் கண்ணாடியை இறக்கி ரசிகர்களுக்கு கை கொடுத்தார். இதன் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus