“எனது மகன் சஞ்சய்-க்கு ‘ப்ரேமம்’ இயக்குநர் சொன்ன கதை நல்லா இருந்துச்சு”… சூப்பரான தகவலை சொன்ன விஜய்!

  • April 11, 2022 / 01:43 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார்.

சமீபத்தில், ‘அரபிக் குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’, ‘பீஸ்ட் மோட்’ ஆகிய 3 பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இம்மூன்று பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘பீஸ்ட்’டுக்காக நெல்சன் விஜய்யை எடுத்த ஸ்பெஷல் பேட்டி நேற்று இரவு சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியில் விஜய்யிடம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிக்க வருவது குறித்து நெல்சன் கேள்வி கேட்டார். அதற்கு விஜய் “சமீபத்துல ‘ப்ரேமம்’ படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூட நேர்ல வந்து என் பையனை வச்சு பண்ண ஒரு கதை சொன்னாரு. அந்த கதை ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா, சஞ்சய் என்ன ஒரு ரெண்டு வருஷத்துக்கு விட்டிருங்க. அப்புறமா நான் நடிக்க வர்றது பத்தி முடிவு எடுக்குறேன்னு சொல்லிட்டாரு” என்று கூறினார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus