விஜய்சேதுபதி மற்றும் டாப்ஸி இணையும் திரைப்படத்தின் டைட்டில் இதுதான்!

  • September 19, 2020 / 09:43 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களில் ஒருவராக விளங்கிய சுந்தர்ராஜன் அவர்களின் மகனான தீபக் சுந்தர்ராஜன் தற்போது விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதையொட்டி இந்த படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் தொடங்கியதாகவும் அந்த ஷூட்டிங்கில் டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் செய்தி வந்தது.

மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா, ஜெகபதிபாபு, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துவருகிறார்கள். இந்த படத்தில் புது ட்விஸ்டாக டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்கள் இரட்டை வேடங்களாக இருக்கும் என்று செய்தி வெளியிட்டார்கள்.

மேலும் இது இரண்டு பீரியட் தொடர்பான கதையை கொண்டது என்றும் கூறியிருந்தார்கள். தற்போது சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த படத்திற்கு “அனபெல் சுப்ரமணியம்” என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus