KGF-யில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘விக்ரம் 61’… ஆரம்பமானது ஷூட்டிங்!

  • July 16, 2022 / 04:07 PM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்க உள்ளாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம்.

இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் இன்று (ஜூலை 16-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில் “KGF-யில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதையை பண்ணியிருக்கேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus