விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’…எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

  • October 24, 2022 / 09:59 AM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸானது.

சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம்.

இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதில் பார்வதி, மாளவிகா மோகனன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், மிக முக்கிய ரோலில் பசுபதி நடிக்கிறார்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்கு ‘தங்கலான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் GLIMPSE-ஐயும் வெளியிட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus