கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற விமல் – சூரி… அபராதம் விதித்த வனத்துறையினர்! – Filmy Focus

  • July 23, 2020 / 10:03 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விமல் – சூரி. இவர்கள் இருவரும் இணைந்து ‘களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, புலிவால், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்ள சிங்கம்’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளனர்.

இப்போது ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே ‘கொரோனா’வால் 144 போடப்பட்டுள்ளதால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த லாக் டவுன் டைமில் நடிகர்கள் விமலும், சூரியும் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிப்பகுதிக்கு சென்று அங்கு மீன் பிடித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு வனத்துறையினர் தலா ரூ.2000 அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus