பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது காவல் துணை ஆணையரிடம் நடிகர் விஷால் பரபரப்பு புகார்!

  • June 9, 2021 / 07:49 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. இரண்டாவது படமான ‘சண்டக்கோழி’-யில் சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டியிருந்தார் விஷால்.

‘லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ மெகா ஹிட்டானதும், நடிகர் விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதகளி, துப்பறிவாளன், இரும்புத் திரை, அயோக்யா’ என படங்கள் குவிந்தது. விஷாலின் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியிலும் ரிலீஸாவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’, ‘எனிமி’ மற்றும் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கொடுத்த புகாரில் “எனது படங்களை தயாரிப்பதற்காக ஆர்.பி.சௌத்ரியிடம் எனது வீட்டுப் பத்திரம் உட்பட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக கொடுத்து கடன் வாங்கியிருந்தேன். இப்போது கடனை திருப்பி கொடுத்த பின்பும் ஆர்.பி.சௌத்ரி உறுதிமொழி பத்திரங்களை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus