‘லத்தி’ டீசர் வெளியீட்டு விழாவில் ரோபோ ஷங்கரை பளார் என அறைந்த விஷால்… ஷாக்கான சூரி!

  • July 26, 2022 / 10:27 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘லத்தி’ படத்தை இயக்குநர் ஏ.வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பாப்புலர் நடிகைகளில் ஒருவரான சுனைனா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் ‘இளைய திலகம்’ பிரபு நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியம் – பாலகிருஷ்ணா தோட்டா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர், என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை ‘RANA புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜூலை 24-ஆம் தேதி) இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினரும், சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் நடிகர் ரோபோ ஷங்கர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென நடிகர் விஷால் “நீ ஓவரா பேசுற” என்று சொல்லி அவரை பளாரென கன்னத்தில் அறைந்திருக்கிறார். முதலில் இந்த சம்பவம் அங்கு அருகில் இருந்த நடிகர் சூரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின், ரோபோ ஷங்கர் தனது நண்பர் என்பதால் ஜாலியாக அப்படி செய்தேன் என்றும், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இதேபோல் தான் ஜாலியாக இருப்போம் என்றும் விஷால் கூறினார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus