விஷாலிடம் கையாடல் செய்த பெண் உயிருக்கு ஆபத்து என்று புகார்!

  • July 7, 2020 / 09:36 PM IST

சமீபத்தில் நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில் வேலை செய்யும் அக்கவுண்டன்ட் ரம்யா 45 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளதாக விஷாலின் மேனேஜர் ஹரி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரையடுத்து சென்னை விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதையொட்டி ஊடகம் ஒன்றிற்கு ரம்யா தனக்கும் தனது குடும்பத்துக்கும் மேனேஜர் ஹரி மிரட்டல் விடுத்ததாகவும் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

கையாடல் புகார் பற்றி முற்றிலுமாக மறுத்துக் கூறிய ரம்யா தனக்கும் கையாடலுக்கும் எந்த சம்பந்தமில்லை என்றும், பொது இடத்தில் வைத்து முழு கணக்கையும் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் மேனேஜர் ஹரி முன்னதாகவே, ரம்யா இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் காவல் நிலையத்திற்கு வந்து இதுபற்றி சமரசம் செய்து கொள்ளலாம் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தனது குடும்பத்திற்கும் தனக்கும் உயிருக்கு ஆபத்து என்று விஷாலின் அக்கவுண்ட் ரம்யா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Attachments area

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus