விஷாலின் சக்ரா திரைப்படத்தின் வெளியீட்டில் தடை!

  • September 24, 2020 / 09:00 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஷால் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சக்ரா”. இந்தப் படம் விரைவில் OTTயில் வெளியாகும் என்று தற்போது விஷால் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக இயக்குனரான எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே ஆகிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர்ராஜா இசையில் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவலர்களாக நடித்துள்ளார்கள் என்றும், சுதந்திர தினத்தன்று நடக்கும் கொள்ளை சம்பவத்தை துப்பறியும் காவலர்களாக இவர்கள் நடித்துள்ளார்கள் என்றும் ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.

இந்த படம் தீபாவளியன்று கண்டிப்பாக வெளியாகும் என்றும், எந்த ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் ரவீந்தர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அவர் ஏற்கனவே இந்த படத்தின் கதையை தான் தயாரிப்பதற்காக ஒப்பந்தம் செய்ததாகவும் இன்னும் அந்த ஒப்பந்தம் காலாவதி ஆகாத நிலையில் இந்த படத்தை தயாரித்துள்ளார்கள் என்றும் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த மனு விசாரணையில் இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus