‘சக்ரா’ படத்தின் வெளியீட்டில் மீண்டும் பிரச்சனையா?

  • October 16, 2020 / 01:00 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஷால் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சக்ரா”. இந்தப் படம் விரைவில் OTTயில் வெளியாகும் என்று தற்போது விஷால் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக இயக்குனரான எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே ஆகிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர்ராஜா இசையில் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவலர்களாக நடித்துள்ளார்கள் என்றும், சுதந்திர தினத்தன்று நடக்கும் கொள்ளை சம்பவத்தை துப்பறியும் காவலர்களாக இவர்கள் நடித்துள்ளார்கள் என்றும் ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.

தற்போது இந்த படத்தை குறித்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி விஷால் இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு ட்ரைடன்ட் ஆர்ட் நிறுவனத்திற்கு சுமார் 4 கோடி நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதாம். ஆனால் விஷால் இதை மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளாராம். இதனால் மீண்டும் இந்த படத்தின் வெளியீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தை இடைவெளி நேரம்வரை பத்திரிக்கையாளர்களுக்காக திரையிட விஷால் முடிவு செய்துள்ளாராம். இதற்கு முன்னர் இரும்புத்திரை படத்தையும் இப்படி இவர்கள் திரையிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus