அஸிமை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லும் விக்ரமன் !

  • December 21, 2022 / 09:08 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 71 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று நான்காவது முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் மணிகண்டன்.

இந்த சீசன் உட்பட இது வரை நடந்த அனைத்து தமிழ் பிக் பாஸ் சீசன்களில் அதிகமாக மூன்று முறை மட்டுமே கேப்டனாக ஒரு நபர் இருந்துள்ளார். சினேகன், யாஷிக்கா , மைனா ( நடப்பு சீசன்) இந்த ரெக்கார்டை மணிகண்டன் உடைத்து புதிய சாதனை செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்கில் மூன்று போட்டியாளர்கள் ஆசிரியர்களாகவும் மீதம் உள்ள 7 போட்டியாளர்கள் விளையாட வேண்டும் பிறகு முதல் நாள் சிறப்பாக விளையாடும் மூன்று மாணவர்கள் அடுத்த நாள் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த உள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீருடன் கடிதத்தை படிக்கின்றனர் .

எப்பொழுதும் எலியும் பூனையுமாக இருக்கும் அஸிம் மற்றும் விக்ரமன் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகின்றனர் . இவர்களின் சோகத்திற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus