வோட்டுக்காக டி.ராஜேந்தர் செய்த காரியம் !

  • February 1, 2023 / 07:38 PM IST

தமிழ் சினிமாவில் பல துறைகளில் முத்திரை பதித்த கலைஞர் டி.ராஜேந்திரன் . ஒரு முறை இயக்குநர் சங்க தேர்தல் இவர் போட்டி போட்டார் . இவருக்கு எதிராக விசு போட்டி போட்டார் . அந்த சமயத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ராஜேந்தர் ” நான் சினிமாவுக்குள் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ரோட்டோரத்தில் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துக்கிடந்தேன்’ என அழுதுகொண்டே பேசினார். இப்படி பேசி அனுதாப வாக்கினை பெற்று விடலாம் என்று நினைத்துள்ளார் டி.ராஜேந்திரன் .

அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘யோவ், இதெல்லாம் என்ன இந்த நாட்டுக்காகவா செஞ்சே.. உனக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டே… அதனால இப்போ நல்லா இருக்கே.. மத்தவங்களுக்கு எதுவும் கொடுத்தியா? அவனவன் முன்னேற்றத்துக்கு அவனவன் கஷ்டப்படுறான். இதுல என்ன தியாகம் இருக்கு?’ என்று கேட்டார். அதிலிருந்து தனது கடந்த கால சோக வாழ்க்கை பற்றி பேசுவதையே டி.ஆர். நிறுத்திவிட்டார் . இந்த சுவாரசியமான செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus