பாலா – சூர்யா இடையே பிரச்னையா ?

  • May 25, 2022 / 02:49 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது அதன் பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியது . ஆனால் நடிகர் சூர்யாவிற்கு இயக்குனர் பாலாவிற்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதனால் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க வாய்ப்பு இல்லை என்ற செய்திகள் வெளியாகி இருந்தது.

தற்பொழுது இருவருக்கும் இடையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் சென்னையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus