கமலை இயக்க தயங்கிய பாலா !

  • November 21, 2022 / 12:28 AM IST

இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாலா . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நாச்சியார் . இந்த படத்தில் ஜோதிகா , ஜி.வி.பிரகாஷ் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா வைத்து படம் இயக்கினார் . இந்த படம் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் . ஆனால் இந்த படம் சரியாக எடுக்கப்படவில்லை என்று கூறி படத்தை தயரிப்பாளர் நிராகரித்துவிட்டார் .

அதன் பிறகு அந்த படம் ஒ.டி.டி -யில் வெளியானது . இந்நிலையில் பாலா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது . முன்னதாக இயக்குனர் பாலா எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை படமாக்க முயன்றார் .

பாலா குற்றப்பரம்பரை நாவலை படமாக்க முதலில் எண்ணியபோது நடிகர் கமலை இந்த படத்தில் நாயகனாக நடிக்க வைக்க முயன்றுள்ளார் அதனால் வேல ராமமூர்த்தியை கமலிடம் கதை சொல்ல வைத்துள்ளார் . கமலுக்கு கதை பிடித்து போக உடனே அந்த படத்திற்கு சரி சொல்லிவிட்டார் .

ஆனால் இயக்குனர் பாலா அடுத்த கட்ட முயற்சிக்கு கமலிடம் பேசவில்லை இதற்கு நடிகர் கமல் இந்த படத்தில் நடித்தால் அவரின் தலையிடு அதிகமாக இருக்கும் என்று பாலா எண்ணியுள்ளார் . எனவே கமலை இயக்க வேண்டாம் என்ற முடிவை பாலா எடுத்துவிட்டார் என்ற செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus