என்னை ஏன் வெளியே அனுப்பினார்கள் – ராம்

  • December 16, 2022 / 10:30 AM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 60 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு மைனா, ரட்சிதா , அமுதவாணன் போட்டி போட்டனர் . போட்டியில் மைனா வென்று பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி உள்ளார் . இதனால் இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் இடம்பெறவில்லை .

இது ஒரு பக்கம் இருக்க இந்த நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன் , விக்ரமன் , ஜனனி , ஏ.டி.கே , அஸிம் ,ரட்சித்தா ஆகியோர் தேர்வாகி உள்ளனர் . இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது .

இந்நிலையில் போன வாரம் எலிமினேட் ஆன ராம் தனது பிக் பாஸ் ஆட்டத்தை பற்றி பேசியுள்ளார் அதில் அதிகபட்சமாக ஜெயிலில் இருந்த போது பூச்சி கடித்து தன்னுடைய இரண்டு கண்களும் அலர்ஜியாகிக் கொண்டே இருந்தது. அதனால்தான் தன்னால் முதல் மூன்று வாரங்கள் சரிவர விளையாட முடியவில்லை. ஆனால் நான் ரகுவரன் கதாபாத்திரத்தில் கடைசி வாரம் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது தன்னை வெளியேற்றியது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நானே பல நாட்களாக அது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் ஏடிகே, விக்ரமன், அசீம், ஜனனி, ஷிவின் என அனைவருமே அந்த வீட்டில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று ராம் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus