பொன்னியின் செல்வனை நிராகரித்த கீர்த்தி சுரேஷ் !

  • July 9, 2022 / 06:16 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது . டீசர் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான குந்தவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்து இருக்கிறார் . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தார் ஆனால் அந்த சமயத்தில் இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus