தமிழில் ஏன் இந்த மாதிரி படங்கள் வருவதில்லை – இளையராஜா

  • April 29, 2022 / 04:43 PM IST

1998 ஆம் ஆண்டு வெளியான ஈரானிய மொழி திரைப்படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் .ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்த படத்தை மஜித் மஜீதி என்பவர் இயக்கி இருந்தார் . இவர் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இயக்குனராக இருக்கிறார் .இந்த திரைப்படம் உலக புகழ் பெற்ற படமாக இருக்கிறது .

இந்நிலையில் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தை அதிகாரப்பூர்வமாக தமிழில் “அக்கா குருவி” என்ற பெயரில் இணைந்து ரீமேக் செய்து உள்ளனர் மதுரை முத்து மூவிஸ் மற்றும் ட்ரீம் பிக்சர்ஸ் நிறுவனம். இயக்குனர் சாமி இந்த படத்தை இயக்கி உள்ளார் .இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . இந்த படத்தில் உள்ள மூன்று பாடல்களையம் இளையராஜா அவர்களே எழுதி உள்ளார் .மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது .

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ் ரீமேக்கான அக்கா குருவி படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதில் இளையராஜா கலந்துகொண்டு “சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால் உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படம் பார்த்த போது மிக ஆச்சரியமாக இருந்தது. ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என ஆச்சர்யமாக இருந்தது என பேசினார் மேலும் நம் தமிழ்நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை என வருத்தமாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றி அவனை அது தாக்கினால் தான், உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை. ஆனால் நம்ம இயக்குநர் சாமி அதே படத்தை, நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus