ஏத்தி விட்ட ஏணியை கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன் !

  • February 13, 2023 / 06:51 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிரின்ஸ் . இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கி இருந்தார் . மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு சம்பளமாக சிவகார்த்திகேயன் பல கோடி ரூபாய் வாங்குகிறார் .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மான் கராத்தே 2014 ஆம் ஆண்டு வெளியான படம் மான் கராத்தே . இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் பி. மதன் தயாரித்து இருந்தார் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணை தயாரிப்பாளராக இருந்தார் . அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க சம்பளமாக 50 லட்சம் பெற்று இருந்தார் . பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல லாபத்தை படம் பெற்றுத்தந்ததால் தயாரிப்பாளர் மதன் இவருக்கு ஆடி கார் ஒன்றை பரிசாக இவருக்கு தந்தார் மேலும் 1.50 கோடி பணமும் தந்துள்ளார் .

தற்போது தயாரிப்பாளர் மதன் கஷ்டத்தில் இருக்கிறார் இதனால் நடிகர் சிவகார்த்திகேயனிடம் டேட் கேட்டு இருக்கிறார் ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்ற செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus