நார்தன் இயக்கத்தில் யஷ் நடிப்பாரா?

  • June 20, 2020 / 04:13 PM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் “மாநாடு”என்ற படத்திலும், இயக்குனர் நார்தன் இயக்கத்தில் மஃபடி படத்தின் ரீமேக்கிலும் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஹன்சிகா நடிப்பில் வெளியாகவுள்ள “மஹா”என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த லாக்டவுன் முடிந்ததும் இந்த படங்களில் நடித்து முடிப்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இயக்குனர் நார்தன் சிம்புவின் படத்திற்கு அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படம் நடிகர் யஷ்ஷுடன் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தது. இதைப் பற்றி இயக்குனர் நாரதன் கூறியுள்ளதாவது”லாக்டவுனில் அனைவருமே தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொண்டிருக்கிறோம், அதனால் இந்த கதை பற்றி யஷ்ஷிடம் நேரில் பேச லாக்டோன் முடியவேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முழுமையான தகவல் வெளியிடப்படும்”என்று கூறியிருக்கிறார்.

கே.ஜி.எஃப் 2 படத்தின் முழுமையான படப்பிடிப்புக்கு பின்னரே அடுத்த படத்திற்கு யஷ் தயாராகுவார் என்றும் திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus