ஐஸ்வர்யா ராயின் 13ஆவது திருமண நாள்

  • April 20, 2020 / 09:17 PM IST

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் இன்று தங்களது 13 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில், இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக எந்திரனின் நடித்த ஐஸ், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா, அபிதாப் பச்சனின் மகன் அபிஷேக்குடன் கடைசியில் செட்டில் ஆனார். முரடன் சல்மான், சின்னப்பையன் விவேக் ஓப்ராய் என அனைவரையும் ஒதுக்கிய ஐஸ், குரு படத்தில் அபிஷேக்குடன் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் அபிதாப் குடும்பத்தினர் இவர்களின் காதலை எதிர்த்தாலும் ஒருகட்டத்தில் வேறு வழியின்றி சம்மதித்தனர். இதற்கு ராஜூவ் மேனனின் தாயும் ஒரு காரணம். வயதில் பெரும் வித்தியாசமிருந்தாலும், கடந்த 2007 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறாள்.

தற்போது 13 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus