இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

  • January 17, 2023 / 08:26 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 90 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . கடந்த வாரம் இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது . இந்நிலையில் டிக்கெட் டு பைனல் போட்டியில் நடந்த அனைத்து டாஸ்கிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்ற அமுதவாணன் நேரடியாக பிக் பாஸ் 6 இறுதிப் போட்டிக்கு தகுதி ஆகி அசத்தி உள்ளார்.

இந்நிலையில் போட்டியாளர் ஏ.டி.கே கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் .இந்த வாரம் இதுவரை எலிமினேஷனலில் இருந்து வெளியான போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டின் உள்ளே வந்தனர் . இதனால் பிக் வீடு ஒரே கொண்டாட்டமாக உள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் மகேஸ்வரி மற்றும் மணிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது . மேலும் மகேஸ்வரி , மணி உள்ளிட்டோர் ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேற்ற பட்டவர்கள் அவர்கள் விருந்தினராக உள்ள வந்துள்ளனர் . வந்த இடத்தில் மகிழ்ச்சி மற்றும் அன்பை வெளிப்படுத்தாமல் இவர்கள் சண்டை போடு கொள்வது பிக் பாஸ் ரசிகர்களுக்கு எரிச்சலாக உள்ளது மேலும் இது வேண்டுமென்று ஸ்கிரிப்ட் செய்து நடந்து வருவதாக மக்கள் எண்ணுகின்றனர் . இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் இந்த சீசன் நடந்த பிக் பாஸ் ரொம்ப ரொம்ப மோசம் என்று மக்கள் எண்ணுகிறார்கள் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus