STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • October 12, 2022 / 10:09 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு கெளதம் மேனனுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus