ஜெட் ஸ்பீடில் நடைபெறும் ‘கே.ஜி.எஃப் 2’ ஷூட்டிங்… வெளியான அசத்தலான அப்டேட்!

  • October 7, 2020 / 01:26 PM IST

‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடிக்கிறார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, 90 % ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாம். சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை துவங்கியுள்ளனர். தற்போது, நாளை (அக்டோபர் 8-ஆம் தேதி) முதல் இந்த ஷெடியூலில் நடிகர் யாஷும் கலந்து கொள்ளப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தின் ஷூட்டிங் முழுவதும் இம்மாத இறுதியில் முடிவடைந்து விடுமாம். படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus