மெகா ஹிட்டான யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… பார்ட் 3-யின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • January 9, 2023 / 10:39 AM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவர் நடித்த ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது. கடந்த ஆண்டு (2022) இப்படத்தின் பார்ட் 2 கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்திருந்தார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

மேலும், பாக்ஸ் ஆஃபிஸிலும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, இந்த படத்தின் பார்ட் 3-க்கான ஷூட்டிங் வருகிற 2025-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus