மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா!
July 18, 2020 / 06:23 PM IST
|Follow Us
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.
அப்போது அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் இவர்களது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்தது. மேலும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு நெகட்டிவ் வந்தது.
இதைத்தொடர்ந்து அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்கள்.
தற்போது கொரோனாவின் பாதிப்பு அதிகமானதால் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளார்கள். இதனால் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய நால்வருமே மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அமிதாபச்சன் குடும்பத்திற்கு கொரோனா என்று செய்தி வெளியானது முதலே அவரது ரசிகர்கள் விரைவில் இவர்கள் குணமாக வேண்டும் என்று வேண்டி இணையதளங்களை பதிவிட்டு வருகிறார்கள்.இதனால் நெகிழ்ந்த அமிதாப்பச்சன் சமீபத்தில் அனைவருக்கும் நன்றி என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
T 3596 – I receive all your blessings and love and prayers for our well being .. on sms, on whatsapp, on insta on Blog .. and all possible social media .. my gratitude has no bounds .. Hospital protocol is restrictive, i cannot say more .. Love 🙏❤️
நடிகை ஐஸ்வர்யாராய் 1997ம் வருடம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் பெரும்பாலான பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “எந்திரன்” படத்தில் நடித்தார். 1994ஆம் வருடம் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
Attachments area