“ராதிகா பேய் மாதிரி உழைப்பாங்க”- இயக்குனர் மனோபாலா!
August 12, 2020 / 04:37 PM IST
|Follow Us
காமெடி நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் மனோபாலா. இவர் தற்போது ராதிகா சரத்குமார் 42 வருடங்களை திரையுலகில் நிறைவு செய்ததையொட்டி அவரை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மனோபாலா இயக்கத்தில் வெளியான இரண்டாவது படமான “நான் உங்கள் ரசிகன்” படத்தில் நடிகர் மோகனுடன் ராதிகா சரத்குமார் இணைந்து நடித்திருந்தார். ஆரம்ப காலத்திலிருந்து திரையுலகில் பணிபுரிந்து வரும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் ராதிகா சரத்குமார் பற்றி கூறியுள்ளதாவது “ராதிகா சரத்குமார் பேய்போல் உழைப்பதற்கு பெயர் போனவர். அவருடைய இந்த கடுமையான உழைப்பே இவ்வளவு உயரத்தை அவர் எட்டுவதற்கு உதவியுள்ளது. அவரது பயணம் இன்னும் தொடரும். அவருடைய திரையுலக பயணத்தில் ஏதோ ஒரு இடத்தில் எனக்கும் பங்கு உள்ளது என்று நினைப்பதில் பெருமை அடைகிறேன். சாய் பாபா அருளால் அவருக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ள ராதிகா “நன்றி மனோபாலா. உங்களுடன் சேர்ந்து சில மறக்கமுடியாத படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ரஜினி நடிப்பில் ஊர்காவலன், மோகன் நடிப்பில் பிள்ளைநிலா மற்றும் நடிகர் விஜயகாந்த் உடனான படங்கள் என இவை அனைத்தும் என்னால் மறக்க முடியாதவை. கண்டிப்பாக கடின உழைப்பே வெல்லும்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “நான் இவ்வளவு தூரம் திரையுலகில் பயணம் செய்வேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஒவ்வொரு நாளையும் சவாலாக எண்ணி என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். கடின உழைப்பால் மட்டுமே நான் இந்த உயரத்தை எட்டியுள்ளேன், அது பலருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் தற்போது அமைந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தனக்கு பாராட்டி பதிவு செய்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தற்போது ராதிகா சரத்குமார் துருவ நட்சத்திரம், ஜெயில், குருதி ஆட்டம், ஓ அந்த நாட்கள், பிறந்தாள் பராசக்தி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
Never have I thought I will come this far, I took everyday as a challenge and gave my best and kept my work evolving, that is what gave me this journey, which has given happiness, hope and courage to many and loads of love and strength to me.Thanks to all🙏🙏 pic.twitter.com/mo22eR6oGB